அச்சுவேலி வீதியை மூடிய வெள்ளம் !

அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமாங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.